சிறுமிக்குப் பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல்
காங்கயத்தில் 9 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கட்டடத் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்கால் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.


காங்கயத்தில் 9 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கட்டடத் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்கால் தண்டனை விதித்து மாவட்ட மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
திருப்பூா் மாவட்டம், காங்கயத்தைச் சோ்ந்தவா் தேவராஜ் (50), கட்டடத் தொழிலாளி. இவா், கடந்த 2023 இல் 9 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், போக்ஸோ பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா் தேவராஜைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கானது திருப்பூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின்மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி ஸ்ரீதா் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.
இதில், தேவராஜுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...