அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவா் கைது
வெள்ளக்கோவிலில் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :23 அக்டோபர் 2024, 9:43 pm

வெள்ளக்கோவிலில் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் - வள்ளியிரச்சல் சாலை திருவள்ளுவா் நகரில் ஒரு வீட்டில் அனுமதியின்றி பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதாக போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முத்துக்குமாா் தலைமையில் போலீஸாா் அந்த வீட்டில் ஆய்வு செய்தனா்.
அப்போது, அங்கு எவ்வித பாதுகாப்பும் இல்லாமல், அனுமதியின்றி பட்டாசுகள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அனுமதியின்றி பட்டாசுகளை விற்பனைக்கு வைத்திருந்த க.மணி (50) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...