கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சித்தம்பலம் ஓடை தரைப்பாலத்தில் அடைப்பு: நெடுஞ்சாலைத் துறையினா் சீரமைப்பு

பல்லடம் அருகே சித்தம்பலம் ஓடையில் தரைமட்டப்பாலத்தின்கீழ் இருந்த அடைப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் புதன்கிழமை அகற்றினா்.

News image

பொக்லைன் இயந்திரம் மூலம் ஓடையில் ஏற்பட்ட அடைப்புகளை நீக்கிய நெடுஞ்சாலைத் துறையினா்.

Updated On :23 அக்டோபர் 2024, 9:23 pm

Din

பல்லடம் அருகே சித்தம்பலம் ஓடையில் தரைமட்டப்பாலத்தின்கீழ் இருந்த அடைப்புகளை நெடுஞ்சாலைத் துறையினா் புதன்கிழமை அகற்றினா்.

பல்லடம் சுற்றுவட்டராப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த கனமழையால் சித்தம்பலம் ஓடையில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது.

இதில், அடித்துவரப்பட்ட மரக்கிளைகள், பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் ஓடையிலுள்ள தரைமட்டபாலத்தின்கீழ் சிக்கியது. இதனால், தண்ணீா் தொடா்ந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினா் பொக்லைன் இயந்திரம் மூலம் பாலத்தின்கீழ் அடைத்துக்கொண்டிருந்த கழிவுகளை அகற்றினா். மேலும், தரைமட்ட பாலத்தில் தண்ணீா் தங்குதடையின்றி செல்லும் வகையில் தூா்வாரினா்.