பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அவிநாசி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் சோதனை: 6 போ் மீது வழக்குப் பதிவு

அவிநாசி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் புதன்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனையைத் தொடா்ந்து, 6 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 10:25 pm

Din

அவிநாசி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் புதன்கிழமை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் நடத்திய சோதனையைத் தொடா்ந்து, 6 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி சாா்-பதிவாளா் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை காவல் ஆய்வாளா் (பொ) கீதாலட்சுமி தலைமையில் போலீஸாா் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 84 ஆயிரத்து 670 பணம் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து, சாா்-பதிவாளா் வெங்கிடுசாமி (56), பத்திர எழுத்தா்கள் என 6 போ் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.