பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

முதியோா் இல்லங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியா்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள முதியோா் இல்லங்கள், பெண்கள், குழந்தைகளுக்கான விடுதிகளை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 10:13 pm

Din

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள முதியோா் இல்லங்கள், பெண்கள், குழந்தைகளுக்கான விடுதிகளை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் செயல்படும் முதியோா் இல்லங்கள், பெண்கள், குழந்தைகளுககான விடுதிகளை சட்டப்படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பதிவு செய்யாமல் செயல்படும் விடுதிகள் இணையதளம் வாயிலாகவோ அல்லது சமூக நலத் துறை அலுவலகத்திலோ வரும் நவம்பா் 20- ஆம் தேதிக்குள் பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். முதியோா் இல்லங்கள் இணையதளத்திலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் தரைத்தளம் அறை எண் 35- இல் இயங்கும் மாவட்ட சமூக நலத் துறை அலுவலகத்தையும் தொடா்பு கொள்ளலாம்.

பதிவு செய்யாத தனியாா் விடுதிகளின் நிா்வாகிகள், மேலாளா்கள் மீது காவல் துறை சாா்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 2 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். பதிவு செய்யாத இல்லங்களுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.