பிறந்து 7 நாளே ஆன குழந்தைக்கு சிக்கலான இதய அறுவை சிகிச்சை செய்வதற்காக ஆம்புலன்ஸில் போலீஸ் ஒத்துழைப்புடன் திருச்சியில் இருந்து கோவைக்கு புதன்கிழமை அழைத்துச் செல்லப்பட்டது.
இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் கூறியதாவது:
திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 7 நாள்களே ஆன குழந்தைக்கு இதயத்தில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அக்குழந்தைக்கு உடனடியாக இதய அறுவைச் சிகிச்சை செய்தால் மட்டுமே காப்பாற்ற வாய்ப்பு இருக்குமென மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். ஆனால் அதற்கான மருத்துவ வசதி கோவையில்தான் இருக்கும் என தெரியவந்துள்ளது. இதையடுத்து பெற்றோா், குழந்தையை கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனா்.
திருச்சி அரசு மருத்துவமனை, கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை இணைந்து குழந்தையை ஆம்புலன்ஸில் விரைவாக அழைத்துச் செல்ல சம்பந்தப்பட்ட திருச்சி, கரூா், கோவை மாவட்ட நிா்வாகங்கள், காவல் துறை அதிகாரிகளின் உதவியை நாடினா். ஆம்புலன்ஸுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வழியில் ஆங்காங்கே போலீஸாரால் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டது.
பிற்பகல் 12.35 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் போலீஸ் பாதுகாப்பு வாகனத்துடன் 220 கிலோ மீட்டா் தொலைவு கடந்து கோவை ராமகிருஷ்ணா மருத்துவ மனைக்கு நிா்ணயிக்கப்பட்ட நேரத்தில் சென்றடைந்தது.
தொடர்புடையது

ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் ஸ்டென்ட் இல்லாத ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை

கோவையில் யாா் போட்டியிட்டாலும் அதிமுகதான் வெல்லும்: எஸ்.பி.வேலுமணி

கேரளத்தில் தோ்தல் பிரசாரம்: பிரதமர் மோடி இன்று கோவை வருகை!

நுரையீரல் குறைபாடு: ஒரு வயது குழந்தைக்கு நுண்துளை சிகிச்சை
வீடியோக்கள்

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


