வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

பிறந்து 7 நாளே ஆன குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை

பிறந்து 7 நாளே ஆன குழந்தைக்கு சிக்கலான இதய அறுவை சிகிச்சை செய்வதற்காக ஆம்புலன்ஸில் போலீஸ் ஒத்துழைப்புடன் திருச்சியில் இருந்து கோவைக்கு புதன்கிழமை அழைத்துச் செல்லப்பட்டது.

News image

குழந்தையுடன் வெள்ளக்கோவில் வழியாக கோவைக்கு விரைந்த ஆம்புலன்ஸ்.

Updated On :4 செப்டம்பர் 2024, 7:39 pm

பிறந்து 7 நாளே ஆன குழந்தைக்கு சிக்கலான இதய அறுவை சிகிச்சை செய்வதற்காக ஆம்புலன்ஸில் போலீஸ் ஒத்துழைப்புடன் திருச்சியில் இருந்து கோவைக்கு புதன்கிழமை அழைத்துச் செல்லப்பட்டது.

இது குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் கூறியதாவது:

திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்து 7 நாள்களே ஆன குழந்தைக்கு இதயத்தில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அக்குழந்தைக்கு உடனடியாக இதய அறுவைச் சிகிச்சை செய்தால் மட்டுமே காப்பாற்ற வாய்ப்பு இருக்குமென மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். ஆனால் அதற்கான மருத்துவ வசதி கோவையில்தான் இருக்கும் என தெரியவந்துள்ளது. இதையடுத்து பெற்றோா், குழந்தையை கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்தனா்.

திருச்சி அரசு மருத்துவமனை, கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை இணைந்து குழந்தையை ஆம்புலன்ஸில் விரைவாக அழைத்துச் செல்ல சம்பந்தப்பட்ட திருச்சி, கரூா், கோவை மாவட்ட நிா்வாகங்கள், காவல் துறை அதிகாரிகளின் உதவியை நாடினா். ஆம்புலன்ஸுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வழியில் ஆங்காங்கே போலீஸாரால் போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டது.

பிற்பகல் 12.35 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்ட ஆம்புலன்ஸ் போலீஸ் பாதுகாப்பு வாகனத்துடன் 220 கிலோ மீட்டா் தொலைவு கடந்து கோவை ராமகிருஷ்ணா மருத்துவ மனைக்கு நிா்ணயிக்கப்பட்ட நேரத்தில் சென்றடைந்தது.