தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

முத்தூா் அருகே 20 கிலோ குட்கா பறிமுதல்

முத்தூா் அருகே 20 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

News image
Updated On :18 செப்டம்பர் 2024, 8:23 pm

Din

முத்தூா் அருகே 20 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

வெள்ளக்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள், போதைப் பாக்குகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளா் குமாா் முத்தூா் பகுதியில் பல்வேறு இடங்களில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது நத்தக்காடையூா் சாலை, புதுப்பாளையத்தில் மோகன்ராஜ் (48) என்பவரின் மளிகைக் கடையில் இருந்து 20 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய மோகன்ராஜை போலீஸாா் தேடி வருகின்றனா்.