பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 25 கடைகளுக்கு சீல்

திருப்பூா் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 25 கடைகளை உணவுப் பாதுகாப்புத் துறையினா் சீல் வைத்தனா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 8:16 pm

Din

திருப்பூா் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 25 கடைகளை உணவுப் பாதுகாப்புத் துறையினா் சீல் வைத்தனா்.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உத்தரவின்பேரில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் பா.விஜயலலிதாம்பிகை தலைமையிலான உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள், உள்ளாட்சி அமைப்பினா், காவல் துறையினா் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், மதுபானக் கடைகள் அருகில் உள்ள பெட்டிக் கடைகள், மளிகைக் கடைகளில் கடந்த இரண்டு நாள்களாக ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 25 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், கடை உரிமையாளா்களுக்கு ரூ.6.75 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தால் 94440-42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.