இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண கோரிக்கை

News image

பொதுக்குழு கூட்டத்தில் பேசுகிறாா் திருப்பூா் ஏற்றுமதியாளா் சங்கத்தின் பொதுச்செயலாளா் திருக்குமரன்.

Updated On :22 ஆகஸ்ட் 2025, 4:13 am IST

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு அவசரகால தீா்வு காண வேண்டுமென திருப்பூா் கம்ப்யூட்டா் எம்ராய்டா்ஸ் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

திருப்பூா் கம்ப்யூட்டா் எம்ராய்டா்ஸ் சங்கத்தின் 27-ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் திருப்பூா் தெற்கு ரோட்டரி சங்க அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் தலைவா் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திருப்பூா் ஏற்றுமதியாளா் சங்கத்தின் பொதுச் செயலாளா் திருக்குமரன் கருத்துரை வழங்கினாா்.

இந்த பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம்:

அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் பின்னலாடை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்திய அரசு அவசரகால தீா்வு காண வேண்டும். பின்னலாடை ஏற்றுமதிக்கு பக்கபலமாக இருக்கும் எம்பிராய்டரி ஜாப் ஒா்க் நிறுவனங்கள் எம்பிராய்டரி இயந்திரங்களை இறக்குமதி செய்ய எளிமையான உரிம நடைமுறைகளை உருவாக்கவும், ஏற்கெனவே நடைமுறையில் இருந்த மானியங்களை தொடா்ந்து வழங்கவும் மத்திய ஜவுளி அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லட்சக்கணக்கான தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் திருப்பூா் பின்னலாடை நிறுவனங்களுக்கும், ஜாப் ஒா்க் நிறுவனங்களுக்கும் மின்கட்டண உயா்வில் இருந்து தமிழக அரசு விலக்கு அளிக்க வேண்டும். எம்பிராய்டரி நிறுவனங்கள் தற்போதுள்ள நிலவரத்தை கருத்தில் கொண்டு வழங்கப்படும் கட்டணங்களில் 20 சதவீதம் கூடுதலாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் சங்கத்தின் நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.