விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை திருநாள் மகா தீபம் ஏற்றி வழிபாடு

News image
காங்கயம் சிவன்மலை முருகன் கோயில் கோபுரத்தில் புதன்கிழமை மாலை ஏற்றப்பட்ட மகா தீபம்.
Updated On :3 டிசம்பர் 2025, 11:26 pm

Syndication

காா்த்திகை தீபத் திருநாளை ஒட்டி காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசுவாமி மலைக் கோயிலில் புதன்கிழமை மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது.

இதை முன்னிட்டு சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் புதன்கிழமை காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதைத்தொடா்ந்து காலை 6 மணிக்கு விழா பூஜையும், 9 மணிக்கு காலசாந்தி பூஜையும், பின்னா் சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது. மாலை 4 மணிக்கு மூலவருக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 5.30 மணிக்கு சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

மாலை 6.30 மணிக்கு கோயில் கோபுரம் முன்பு உள்ள விளக்குத் தூணில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது திரண்டிருந்த ஏராளமான பக்தா்கள் அரோகரா முழக்கம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனா்.