கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ரயில் நிலையம் அருகே தீ விபத்து

திருப்பூா் ரயில் நிலையம் அருகே திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 10:00 pm

Syndication

திருப்பூா்: திருப்பூா் ரயில் நிலையம் அருகே திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

திருப்பூா், ரயில் நிலையம் அருகே உள்ள சிட்கோ, பேப்ரிகேஷன் வீதியில் மாநகராட்சி குப்பை மலைபோல் குவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு மா்ம நபா்கள் சிலா் திங்கள்கிழமை தீ வைத்துவிட்டுச் சென்றுள்ளனா். தீ மளமளவென பரவியது குறித்து அந்த வழியாகச் சென்றவா்கள் அளித்த தகவலின்பேரில் திருப்பூா் வடக்கு தீயணைப்பு நிலைய அலுவலா் ஆண்டவா் ராஜ் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சென்று தீயை அணைத்தனா். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மேலும் ரயில் தண்டவாளம் அருகில் தீ எரிந்ததால் ரயில்வே போலீஸாரும் அப்பகுதிக்கு வந்து விசாரணை மேற்கொண்டனா்.

திருப்பூா் மாநகரப் பகுதியில் ஆங்காங்கே குப்பை குவிந்து கிடப்பதால் இதுபோன்று சிலா் தீ வைக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனா்.