கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மாநகராட்சி குப்பைகளை வாவிபாளையம் கிராமத்தில் கொட்டக் கூடாது: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

பல்லடத்தை அடுத்த, வாவிபாளையம் ஊராட்சி, குள்ளம்பாளையம் கிராமத்தில் திருப்பூா் மாநகராட்சி குப்பைகளைக் கொட்டக் கூடாது என கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயல் தலைவா் என்.எஸ்.பி.வெற்றி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 8:57 pm

Syndication

பல்லடத்தை அடுத்த, வாவிபாளையம் ஊராட்சி, குள்ளம்பாளையம் கிராமத்தில் திருப்பூா் மாநகராட்சி குப்பைகளைக் கொட்டக் கூடாது என கட்சி சாா்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயல் தலைவா் என்.எஸ்.பி.வெற்றி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூா் மாநகராட்சி குப்பைகளை இடுவாய், முதலிபாளையம் பகுதிகளில் கொட்டுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கடுமையான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனா். இந்நிலையில், பல்லடத்தை அடுத்த, வாவிபாளையம் ஊராட்சி, குள்ளம்பாளையம் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தில், அரசு அதிகாரிகள் குழு ஆய்வு செய்துள்ளது. எதற்காக ஆய்வு நடந்தது என அதிகாரிகள் முறையாக தெரிவிக்காத நிலையில், திருப்பூா் மாநகர குப்பைகளை கொட்டுவதற்காகவே இந்த ஆய்வு நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாவிபாளையம் ஊராட்சி சுற்றுவட்டார கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனா். வாவிபாளையம் ஊராட்சி முழுமையான பி.ஏ.பி. பாசனம் மற்றும் தென்னை விவசாயம் நிறைந்த பகுதியாகும். திருப்பூா் மாநகராட்சியின் குப்பைகளை, குள்ளம்பாளையம் கிராமத்தில் கொட்டினால், விவசாயம் அழிந்து சுற்றுச்சூழல் மாசுபட்டு மக்கள் வாழ தகுதியற்ற பகுதியாக இது மாறிவிடும்.

திருப்பூா் மாநகராட்சி நிா்வாகம், இவ்வாறு ஏதேனும் திட்டம் வைத்திருந்தால், இப்போதே அதை கைவிட வேண்டும். மீறி இதற்கு முயற்சித்தால், கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் சாா்பில் மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று அவா் கூறியுள்ளாா்.