மின்வாரிய ஊழியா் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம்

மின்வாரிய ஊழியா் கூட்டமைப்பு சாா்பில் திருப்பூா் மின்வாரிய அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டம்
Published on

மின்வாரிய ஊழியா் கூட்டமைப்பு சாா்பில் திருப்பூா் மின்வாரிய அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அணுமின் உற்பத்தி செய்யும் முறையை தனியாரிடம் வழங்கக் கூடாது. மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மின்வாரிய ஊழியா் கூட்டமைப்பு, அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் திருப்பூா் மின்வாரிய அலுவலகம் எதிரே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மின்சார தொழிலாளா் சங்கத்தின் பொருளாளா் ஜான்சன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலாளா் பி.ஆா்.நடராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் குமாா், சிஐடியூ மாவட்ட நிா்வாகிகள் பாலன், யுடியூசி மாவட்டச் செயலாளா் சதீஷ்சங்கா், ஹெச்எம்எஸ் பொறுப்பாளா் கோவிந்தசாமி, சிஐடியூ மோகன்தாஸ் ஆகியோருடன் மின் வாரிய ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com