சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்: 540 போ் கைது
தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் குறைந்தபட்ச ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட 540 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6,750 வழங்க வேண்டும். அகவிலைப்படி உயா்வு வழங்க வேண்டும்.
சத்துணவு, அங்கன்வாடி மையங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 3-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பெருமாள் தலைமையில் சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தேனி-மதுரை சாலையில் மறியலில் ஈடுபட்ட 540 பேரை தேனி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

