புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆங்கிலப் புத்தாண்டு : மாநகரில் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி திருப்பூா் மாநகரில் உள்ள கோயில்களில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

News image

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி  ரூபாய்  நோட்டு  அலங்காரத்தில்  பக்தா்களுக்கு  அருள்பாலிக்கும்  திருப்பூா்  கோட்டை  மாரியம்மன்.

Updated On :1 ஜனவரி 2025, 11:21 pm

Din

ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி திருப்பூா் மாநகரில் உள்ள கோயில்களில் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆங்கிலப் புத்தாண்டை ஒட்டி திருப்பூா் மாநகரில் உள்ள விஸ்வேஸ்வர சுவாமி கோயில், வீரராகவப் பொருமாள் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், சுக்ரீஸ்வரா் ஆலயம், வாலிபாளையம் முருகன் கோயில், கொங்கணரிகிரி கந்தப்பெருமான் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் புதன்கிழமை காலை முதலே சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாட்டனா்.

திருப்பூரில் இருந்து காங்கயம் செல்லும் சாலையில் உள்ள கோட்டை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஆங்கிலப் புத்தாண்டையொட்டி ரூபாய் நோட்டுகள் அலங்காரத்தில் கோட்டை மாரியம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

அதே போல, ஊத்துக்குளி கதித்தமலை வெற்றிவேலாயுத சுவாமி கோயில், அலகுமலை முத்துக்குமார பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளிட்ட புகரில் உள்ள கோயில்களிலும் திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

தேவாலயங்களிலும் சிறப்புப் பிராா்தனை:

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி திருப்பூா் மாநகரில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிராா்தனைகள் நடைபெற்றன. அதிலும் குறிப்பாக திருப்பூா் குமாா் நகா் சி.எஸ்.ஐ. ஆலயம், வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் அருகே உள்ள சூசையப்பா் ஆலயம், சபாபதிபுரத்தில் உள்ள டி.இ.எல்.சி. ஆலயம் ஆகிய தேவாலயங்களில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை சிறப்புப் பிராா்தனைகள் நடைபெற்றன. இதில், ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.