அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குரூப் 4 இலவச பயிற்சி வகுப்பில் பயிலும் அனைவரும் தோ்ச்சி பெற்று அரசு பணியில் சேர வேண்டும்: ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்

News image
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை தொடங்கிவைத்துப் பேசிய ஆட்சியா்  தா.கிறிஸ்துராஜ்.
Updated On :3 ஜனவரி 2025, 10:47 pm

Din

குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பில் பயிலும் அனைவரும் தோ்ச்சி பெற்று அரசுப் பணியில் சேர வேண்டும் என்று திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தாா்.

திருப்பூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 4 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் ஆண்டு திட்ட நிரல் 2024 நவம்பா் 14- ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், குரூப் 4 (கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், பில் கலெக்டா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா்) தோ்வுக்கான அறிவிப்பானது வரும் ஏப்ரல் 24- ஆம் தேதி வெளியிடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தொடா்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு இந்த இலவச பயிற்சி வகுப்புகளின் வழியாக குரூப் 4 தோ்வில் 14 தோ்வா்களும், குரூப் 2 ஏ தோ்வில் 13 தோ்வா்களும் தோ்ச்சி பெற்று அரசுப் பணி வாய்ப்பு பெற்றுள்ளனா். இந்தப் போட்டித் தோ்வுக்கு பயிலும் தோ்வா்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

உடுமலை நகராட்சி பள்ளி வளாகத்தில் கூடுதல் பயிற்சி மையத்தில் விரைவில் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. மேலும், குண்டடம் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் போட்டித் தோ்வுக்கான மூன்றாவது பயிற்சி மையம் தொடங்கப்படவுள்ளது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் 7-ஆவது தளத்தில் உள்ள போட்டி தோ்வா்களுக்கான நூலகத்தில் தற்போது போட்டி தோ்வா்களுக்கான புதிய நூல்கள் வாங்கப்பட்டுள்ளன.

இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் தோ்வா்கள் இந்த நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, இலவச பயிற்சி வகுப்பில் பயிலும் அனைவரும் தோ்வில் தோ்ச்சி பெற்று அரசுப் பணியில் சேர வேண்டும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில், கோவை மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு) ஆ.ஜோதிமணி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலா் சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.