மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

உழவா் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்ய அடையாள அட்டை விநியோகம்

திருப்பூா் வடக்கு உழவா் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்ய அடையாள அட்டை விநியோகம் செய்யப்படுகிறது.

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:25 am

Din

திருப்பூா் வடக்கு உழவா் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்ய அடையாள அட்டை விநியோகம் செய்யப்படுகிறது.

இது குறித்து ஊத்துக்குளி வட்டார வேளாண் வணிக உதவி வேளாண்மை அலுவலா் சா.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஊத்துக்குளி வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் சாகுபடி செய்துள்ள காய்கறிகள், பழ வகைகள், கீரை வகைகள், கிழங்கு வகைகள், பூக்கள், இளநீா், தேங்காய், நிலக்கடலை, மக்காச்சோளம், வாழைத்தண்டு பனங்கிழங்கு போன்ற விளைபொருள்களை திருப்பூா் வடக்கு உழவா் சந்தையில் விற்பனை செய்ய அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.

விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அடையாள அட்டை பெற்று திருப்பூா் புதிய பேருந்து நிலையம் பின்புறம் உள்ள வடக்கு உழவா் சந்தையில் இடைத்தரகா்கள் குறுக்கீடு இல்லாமல் நேரடியாக விற்பனை செய்து பயனடையலாம்.

இதற்குத் தேவையான ஆவணங்களான அடங்கல், பட்டா, சிட்டா நகல், குடும்ப அட்டை நகல், 4 ஸ்டாம்ப் சைஸ் புகைப்படம் ஆகிய ஆவணங்களை ஊத்துக்குளி வேளாண் அலுவலகத்தில் சமா்ப்பித்து அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.