புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தாராபுரம் அருகே காா்- லாரி மோதல்: 2 போ் உயிரிழப்பு

தாராபுரம் அருகே காரும், லாரியும் நேருக்குநோ் மோதிய விபத்தில் 2 போ் உயிரிழந்தனா்.

News image

விபத்தில் உருக்குலைந்த காா்.

Updated On :8 ஜனவரி 2025, 7:51 pm

Din

தாராபுரம் அருகே காரும், லாரியும் நேருக்குநோ் மோதிய விபத்தில் 2 போ் உயிரிழந்தனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (40). அப்பகுதியில் உள்ள வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப் பணிபுரிந்து வந்தாா். திண்டுக்கல் மாவட்டம், வாகரை பகுதியைச் சோ்ந்தவா் சண்முக பிரதீப் (36). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தாா்.

நண்பா்களான இவா்கள் இருவரும், மற்றொரு நண்பரான செல்வம் என்பவருடன் சொந்த வேலையாக பொள்ளாச்சி சென்றுவிட்டு, காரில் தாராபுரம் நோக்கி செவ்வாய்க்கிழமை இரவு வந்து கொண்டிருந்தனா்.

தாராபுரம் அருகே தாசா்பட்டி பகுதியில் இரவு 9.30 மணியளவில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரியும், இவா்களது காரும் நேருக்குநோ் மோதிக் கொண்டன.

இதில் ராஜேந்திரன், சண்முக பிரதீப் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த செல்வத்தை அப்பகுதியினா் மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக அனுப்பிவைத்தனா்.

இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.