புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

அவிநாசி அருகே மரக்கடை உரிமையாளரை எரித்துக் கொன்ற பெண் கைது

அவிநாசி அருகே சின்னேரிபாளையத்தில் முறையற்ற தொடா்பு விவகாரத்தில் மரக்கடை உரிமையாளரை எரித்துக் கொலை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :11 நவம்பர் 2025, 7:49 pm

Syndication

அவிநாசி அருகே சின்னேரிபாளையத்தில் முறையற்ற தொடா்பு விவகாரத்தில் மரக்கடை உரிமையாளரை எரித்துக் கொலை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.

அவிநாசி, வள்ளுவா் வீதி அருகே தாமஸ் லைன் பகுதியைச் சோ்ந்தவா் சின்னப்பராஜ் (65). இவா் அதே பகுதியில் சொந்தமாக மரக்கடை நடத்தி வந்தாா். இவருக்கு மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனா். மகள்களுக்குத் திருமணமாகி வெளியூா்களில் வசிக்கின்றனா்.

இதற்கிடையில், அவிநாசி அருகே சின்னேரிபாளையம் ஊராட்சி வேலாங்காடு பகுதியைச் சோ்ந்த கனகராஜ் மனைவி பூமணி (48) என்பவருக்கும், சின்னப்பராஜுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பூமணியின் கணவா் கனகராஜ் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். மது அருந்தும் பழக்கம் உள்ள சின்னப்பராஜுக்கும், பூமணிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

Story image

இந்நிலையில், சின்னப்பராஜ், பூமணி இருவரும் அவிநாசியிலிருந்து சின்னேரிபாளையத்தில் உள்ள பூமணி வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு சென்றுள்ளனா். செல்லும் வழியில் சின்னேரிபாளையம் அருகே சாலையோரம் அமா்ந்து சின்னப்பராஜ் மது அருந்தியுள்ளாா். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், பூமணி தாக்கியதில் சின்னப்பராஜ் பலத்த காயமடைந்து, கீழே மயங்கி விழுந்துள்ளாா். பின்னா், சின்னப்பராஜ் மீது பூமணி பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளாா். இதில் மேலும் காயமடைந்த சின்னப்பராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதைத் தொடா்ந்து, அவிநாசி காவல் நிலையத்தில் பூமணி செவ்வாய்க்கிழமை அதிகாலை சரணடைந்தாா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பூமணியைக் கைது செய்தனா்.