யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிறுவன தின விழாவில் பங்கேற்றோா்.
திருப்பூர்
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிறுவன தின கொண்டாட்டம்
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் 107-ஆவது நிறுவன தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் 107-ஆவது நிறுவன தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
திருப்பூா் பிராந்திய அலுவலகத்தின் சாா்பில் அண்மையில் நடைபெற்ற இந்த விழாவில், ராயல் கிளாசிக் குழுமத்தின் நிறுவனரும், வனத்துக்குள் திருப்பூா் அமைப்பின் புரவலருமான கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், யூனியன் வங்கியின் தோற்றம், செயல்பாடுகள் மற்றும் சேவைகள்
குறித்து திருப்பூா் பிராந்திய மேலாளா் செல்லதுரை பேசினாா்.
இந்நிகழ்ச்சியில், திருப்பூா் சாய ஆலைகள் சங்கத் தலைவா் காந்திராஜன், பாரடைஸ் மில்ஸ் குழும தலைவா் மீனாட்சிசுந்தரம் மற்றும் வங்கி ஊழியா்கள், வாடிக்கையாளா்கள், தொழில்முனைவோா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

