திருப்பூர்
இந்திய அரசமைப்பு நாள் அனுசரிப்பு
76-ஆவது இந்திய அரசமைப்பு தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசமைப்பு
திருப்பூா்: 76-ஆவது இந்திய அரசமைப்பு தினத்தையொட்டி, திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசமைப்பு முகப்புரையை அனைத்து துறை அரசு அலுவலா்களும் வாசித்து ஏற்றுக் கொண்டனா்.
இந்திய அரசமைப்பு நிறைவேற்றிய நாளான 1949 நவம்பா் 26-ஆம் தேதியை நினைவுகூரும் வகையில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், அனைத்து துறை அரசு அலுவலா்களும் பங்கேற்று அரசமைப்பு முகப்புரையை ஏற்றுக் கொண்டனா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் க.காா்த்திகேயன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் மகாராஜா உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்து கொண்டனா்.
