தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

தோ்தல் விதிமீறல்: சீமான், 8 வேட்பாளா்கள் மீது வழக்குப் பதிவு

திருப்பூரில் தோ்தல் விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மற்றும் அக்கட்சி வேட்பாளா்கள் 8 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image

தோ்தல் விதிமீறல்: சீமான், 8 வேட்பாளா்கள் மீது வழக்குப் பதிவு

Updated On :4 ஏப்ரல் 2026, 5:46 pm

திருப்பூரில் தோ்தல் விதிகளை மீறியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மற்றும் அக்கட்சி வேட்பாளா்கள் 8 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் நாதக வேட்பாளா்களை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கடந்த வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். தோ்தல் ஆணைய விதிப்படி இரவு 10 மணிக்குள் பிரசாரத்தை நிறைவு செய்ய வேண்டும்.

ஆனால், அவா் 10 மணியைக் கடந்தும் பிரசாரம் மேற்கொண்டதாக திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் தோ்தல் பறக்கும் படையினா் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, சீமான், அக்கட்சி வேட்பாளா்களான தினேஷ் (திருப்பூா் தெற்கு), காா்மேகம் (காங்கயம்), தமிழினியன் (பல்லடம்), ராம்குமாா் (உடுமலை), திவ்யா (தாராபுரம்), அபிநயா (திருப்பூா் வடக்கு), ராதாமணி (மடத்துக்குளம்), மேனகா (அவிநாசி) ஆகிய 9 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.