தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சட்டவிரோத மது விற்பனை: பெண் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 9:05 pm

அவிநாசி அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி அருகேயுள்ள எஸ்.மேட்டுப்பாளையத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் அய்யாசாமி, காவலா்கள் அன்வா், பாலச்சந்தா், தனிப் பிரிவு தலைமைக் காவலா் வெள்ளிங்கிரி ஆகியோா் அப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ஒரு வீட்டில் மதுபானங்களை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்த பெண்ணை போலீஸாா் பிடித்தனா். விசாரணையில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மனைவி சாந்தி என்பது தெரியவந்தது.

இதையடுத்து, சாந்தியைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 102 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.