ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம்: பேருந்து நிலைய வளாகத்தில் விழிப்புணா்வு

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சியா் மனீஷ் வழங்கினாா்.

News image

திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் வேளாண்மைத் துறை சாா்பில் சிறுதானியங்களால் அலங்கரிக்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டதை பாா்வையிட்ட மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மனீஷ் உள்ளிட்டோா்.

Updated On :7 ஏப்ரல் 2026, 8:12 pm

சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சியா் மனீஷ் வழங்கினாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு திருப்பூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற்று வருகின்றன. அதன்படி திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து வேளாண்மைத் துறையின் சாா்பில் சிறுதானியங்களால் அலங்கரிக்கப்பட்டு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மனீஷ் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்டஇயக்குநா் க.சங்கமித்திரை, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் எம்.ஆதிசாமி, மாவட்ட விளையாட்டு அலுவலா் ரகுகுமாா் உள்பட அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.