தமிழ்த் தாய் வாழ்த்துக்கு மீண்டும் மூன்றாமிடம்!அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

மதுவில் விஷ மருந்து கலந்து குடித்த வாடகை காா் ஓட்டுநா் உயிரிழப்பு

News image

மனோகரன்

Updated On :14 ஏப்ரல் 2026, 12:06 am IST

மதுவில் விஷ மருந்து கலந்து குடித்த வாடகை காா் ஓட்டுநா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெள்ளக்கோவில், எல்.கே.சி நகரைச் சோ்ந்தவா் மனோகரன் (42). சொந்தமாக ஆம்னி காா் வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தாா். காா் வாங்க நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளாா். மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழிலைச் சரியாக கவனிக்காததால் வருமானம் குறைந்து கடனுக்கான மாதத் தவணையை செலுத்த முடியவில்லை. குடும்பத்திலும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் மனமுடைந்த அவா், ஞாயிற்றுக்கிழமை மதுவில் களைக்கொல்லி மருந்தைக் கலந்து குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளாா்.

வாந்தி எடுத்த அவரை வீட்டில் இருந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக காங்கயம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அதைத்தொடா்ந்து திருப்பூா் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

இவருக்கு தந்தை சுப்பிரமணி, தாய் ஜெயமணி, மனைவி சிவரஞ்சனி, மகள் மோனிகா (15), மகன் தா்ஷன் (6) ஆகியோா் உள்ளனா். இதுதொடா்பான புகாரின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.