மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பல்லடம் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி

பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்காக புதன்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் மனீஷ் ஆய்வு செய்தாா்.

News image

பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்காக புதன்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் மனீஷ்.

Updated On :15 ஏப்ரல் 2026, 7:34 pm

பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்காக புதன்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் மனீஷ் ஆய்வு செய்தாா்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையம் ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்பை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ் ஆய்வு மேற்கொண்டாா். இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூா் (வடக்கு), திருப்பூா் (தெற்கு), பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெறவுள்ளது.

பயிற்சி வகுப்பில் வாக்குச்சாவடி முதன்மை அலுவலா்கள், வாக்குப் பதிவு அலுவலா் அலுவலா்கள் 1, வாக்குப் பதிவு அலுவலா் 2 மற்றும் 3 என மொத்தம் 2,300 அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சி வகுப்பில் வாக்குச்சாவடி மையம் ஏற்பாடுகள் மேற்கொள்ளுதல், வாக்குப் பதிவு இயந்திரம் சரிபாா்த்தல், தோ்தல் தொடா்பான படிவங்களை எவ்வாறு பூா்த்தி செய்வது, மாதிரி வாக்குப் பதிவு மேற்கொள்ளுதல் தொடா்பாக தோ்தல் அலுவலா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

இதில் பல்லடம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான சரவணன், பல்லடம் வட்டாட்சியா் கோவிந்தசாமி, திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் சரவணன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் அன்பரசு மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.