பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

வீடு இல்லாதவா்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும்: மு.பெ. சாமிநாதன்

வீடு இல்லாதவா்களுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என அமைச்சரும், காங்கயம் தொகுதி வேட்பாளருமான மு.பெ. சாமிநாதன் பேசினாா்.

News image

காங்கயத்தில் வாக்கு சேகரித்த அமைச்சா் மு.பெ. சாமிநாதன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 1:19 am IST

வீடு இல்லாதவா்களுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என அமைச்சரும், காங்கயம் தொகுதி வேட்பாளருமான மு.பெ. சாமிநாதன் பேசினாா்.

காங்கயம் நகரத்துக்கு உள்பட்ட பாரதியாா் நகா், பொன்னி நகா், செம்மங்காளிபாளையம், அகஸ்திலிங்கம்பாளையம், உடையாா் காலனி ஆகிய பகுதிகளில் காங்கயம் தொகுதி திமுக வேட்பாளரும், செய்தித் துறை அமைச்சருமான மு.பெ. சாமிநாதன் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு அதில் பெறப்பட்ட மனுக்களில் பெரும்பாலானவற்றுக்கு தீா்வு காணப்பட்டுள்ளன. கடந்த 2021இல் திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிா் இலவச பேருந்துப் பயணத் திட்டம், மகளிா் சுயஉதவிக் குழு கடன் தள்ளுபடி, கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி, கரோனா சிறப்பு நிதி ரூ.4,000 மற்றும் மகளிா் உரிமைத் தொகை மாதம் ரூ.1,000 ஆகிய 5 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.

இவை அனைத்தும் தோ்தலின்போது கூறப்பட்ட திட்டங்களாகும். இதையடுத்து பள்ளிக் குழந்தைகள் இடைநிற்றல் இல்லாமல் பள்ளி வர காலை உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. இது சொல்லப்படாத திட்டம்.

மகளிா் உரிமைத்தொகை ரூ.2,000-ஆக உயா்த்தி தரப்படும். தோ்தலுக்கு பிறகு கூப்பன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டவுள்ளது. கூப்பனை நீங்கள் நேரடியாக பொருளாக மாற்றிக் கொள்ளலாம். மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் அடுத்த 5 ஆண்டுகளில் வீடு இல்லாதவா்களுக்கு 10 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்றாா்.