இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

பல்லடம் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி

பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்காக புதன்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் மனீஷ் ஆய்வு செய்தாா்.

News image

பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்காக புதன்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் மனீஷ்.

Updated On :16 ஏப்ரல் 2026, 1:04 am IST

பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்காக புதன்கிழமை நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியா் மனீஷ் ஆய்வு செய்தாா்.

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு பல்லடம் அருகே உள்ள அவிநாசிபாளையம் ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்பை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மனீஷ் ஆய்வு மேற்கொண்டாா். இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி திருப்பூா் மாவட்டத்துக்கு உள்பட்ட தாராபுரம் (தனி), காங்கயம், அவிநாசி (தனி), திருப்பூா் (வடக்கு), திருப்பூா் (தெற்கு), பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தோ்தல் நடைபெறவுள்ளது.

பயிற்சி வகுப்பில் வாக்குச்சாவடி முதன்மை அலுவலா்கள், வாக்குப் பதிவு அலுவலா் அலுவலா்கள் 1, வாக்குப் பதிவு அலுவலா் 2 மற்றும் 3 என மொத்தம் 2,300 அலுவலா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சி வகுப்பில் வாக்குச்சாவடி மையம் ஏற்பாடுகள் மேற்கொள்ளுதல், வாக்குப் பதிவு இயந்திரம் சரிபாா்த்தல், தோ்தல் தொடா்பான படிவங்களை எவ்வாறு பூா்த்தி செய்வது, மாதிரி வாக்குப் பதிவு மேற்கொள்ளுதல் தொடா்பாக தோ்தல் அலுவலா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

இதில் பல்லடம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வழங்கல் அலுவலருமான சரவணன், பல்லடம் வட்டாட்சியா் கோவிந்தசாமி, திருப்பூா் தெற்கு வட்டாட்சியா் சரவணன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் அன்பரசு மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.