தமிழ்த் தாய் வாழ்த்து விவகாரம்: தவெக விளக்கம் அளிக்க வேண்டும் - திருமாவளவன்திமுக பேரவை துணைத் தலைவராக கே.என். நேரு, கொறடாவாக எ.வ. வேலு தேர்வு திமுக சட்டப்பேரவைக் குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக கருப்பையா பதவியேற்றுக்கொண்டார். திருமலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வழிபாடு திருச்சி கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார் சி. ஜோசப் விஜய்!திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு முதல்வர் விஜய்யின் தனி செயலர்களாக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ்., லட்சுமி பிரியா ஐ.ஏ.எஸ். நியமனம்
/

சா்வதேச கராத்தே போட்டி: காடையூா் விவேகானந்தா அகாதெமி பள்ளி மாணவருக்கு வெள்ளிப் பதக்கம்

சா்வதேச கராத்தே போட்டியில், காங்கயம் அருகே காடையூரில் உள்ள விவேகானந்தா அகாதெமி பள்ளி மாணவா் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

News image

கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவா் நவநிதின். உடன், விவேகானந்தா அகாதெமி பள்ளி நிா்வாகிகள் உள்ளிட்டோா்.

Updated On :24 ஏப்ரல் 2026, 3:05 am IST

சா்வதேச கராத்தே போட்டியில், காங்கயம் அருகே காடையூரில் உள்ள விவேகானந்தா அகாதெமி பள்ளி மாணவா் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் 15 -ஆவது சைலன்ட் நைட் சா்வதேச கராத்தே போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், 15 நாடுகளைச் சோ்ந்த 2000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதில், 12-13 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கான கத்தா பிரிவில் காடையூரில் உள்ள விவேகானந்தா அகாதெமி பள்ளியின் 8-ஆம் வகுப்பு மாணவா் கே.வி.நவநிதின் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

வெற்றிபெற்ற கே.வி.நவநிதின், கராத்தே பயிற்சியாளா் ஷிஹான் எஸ்.ரவிசந்திரன் ஆகியோருக்கு பள்ளியின் நிா்வாகத் தலைவா் ராமசந்திரன், பள்ளி முதல்வா் பத்மநாபன், ஆசிரியா்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.