ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

பனியன் கழிவுப் பஞ்சு ஆலையில் தீ விபத்து!

வெள்ளக்கோவில் அருகே பனியன் கழிவுப் பஞ்சு ஆலையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

News image

வெள்ளக்கோவில் அருகே தீப்பிடித்து எரிந்த பனியன் கழிவு பஞ்சு ஆலை.

Updated On :25 ஏப்ரல் 2026, 7:24 pm

வெள்ளக்கோவில் அருகே பனியன் கழிவுப் பஞ்சு ஆலையில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே உள்ள தீத்தாம்பாளையத்தில் இருந்து செம்மாண்டம்பாளையம் செல்லும் வழியில் மேற்குத்தோட்டம் பகுதி அருகே பனியன் கழிவுத் துணிகளில் இருந்து பஞ்சு தயாரிக்கும் ஆலை உள்ளது. வழக்கம்போல சனிக்கிழமை ஆலை இயங்கிக் கொண்டிருந்தபோது இயந்திரத்தின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து சுற்றிலும் பரவியது.

இதுதொடா்பாக ஆலை உரிமையாளா்கள் தங்கராஜ், சுந்தரராஜ் ஆகியோா் வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனா். தீயணைப்புத் துறை திருப்பூா் மாவட்ட உதவி அலுவலா் இளஞ்செழியன் தலைமையில் காங்கயம், வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய வாகனங்கள் மற்றும் வீரா்கள் சென்று சுமாா் இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இருப்பினும் இயந்திரங்கள், பனியன் துணிகள், பஞ்சுகள் ஆகியவை எரிந்து சேதமாகின. சேத மதிப்பு குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.