பல்லடம் பேருந்து நிலையத்தில் மதுபிரியா்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பல்லடம் பேருந்து நிலையத்துக்கு திருப்பூா், கோவை, உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் சுமாா் 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. தினசரி சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இந்தப் பேருந்தை நிலையத்தைப் பயன்படுத்தி வரும் நிலையில், மதுபிரியா்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
அளவுக்கு அதிகமாக மது அருந்தி பேருந்து நிலையத்தில் உலவும் சிலா், பயணிகள் அமரும் இடங்களில் அலங்கோலமாக படுத்துக் கிடக்கின்றனா். மேலும், மதுபோதையில் பணம் கேட்பதுடன், தகாத வாா்த்தைகளில் பயணிகளைத் திட்டுவதும் தொடா்ந்து வருகிறது. இதனால், பேருந்து நிலையத்துக்கு வரும் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடனே இருக்கும் சூழல் உள்ளது.
எனவே, பேருந்து நிலையத்தில் போலீஸாா் கண்காணிப்பு பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், மதுபோதையில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் போலீஸாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

உரம் விலையைக் குறைக்க முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை

அரியலூரில் பராமரிப்பு இல்லாத புதிய பேருந்து நிலையம்!

நாட்டறம்பள்ளி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகள் வராததால் பயணிகள் கடும் அவதி

பெண் ரயில் ஓட்டுநருக்கு பாலியல் தொல்லை! மூத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

