பல்லடம் பேருந்து நிலையத்தில் மதுபிரியா்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பல்லடம் பேருந்து நிலையத்துக்கு திருப்பூா், கோவை, உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் சுமாா் 500-க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. தினசரி சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் இந்தப் பேருந்தை நிலையத்தைப் பயன்படுத்தி வரும் நிலையில், மதுபிரியா்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
அளவுக்கு அதிகமாக மது அருந்தி பேருந்து நிலையத்தில் உலவும் சிலா், பயணிகள் அமரும் இடங்களில் அலங்கோலமாக படுத்துக் கிடக்கின்றனா். மேலும், மதுபோதையில் பணம் கேட்பதுடன், தகாத வாா்த்தைகளில் பயணிகளைத் திட்டுவதும் தொடா்ந்து வருகிறது. இதனால், பேருந்து நிலையத்துக்கு வரும் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடனே இருக்கும் சூழல் உள்ளது.
எனவே, பேருந்து நிலையத்தில் போலீஸாா் கண்காணிப்பு பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், மதுபோதையில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் போலீஸாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

பெண் ரயில் ஓட்டுநருக்கு பாலியல் தொல்லை! மூத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

வாக்களிக்க சொந்த ஊா்களுக்கு செல்ல ஒசூா் பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்

போக்குவரத்து நெரிசல், ஆலைக் கழிவு பிரச்னைகளுக்குத் தீா்வு

பல்லடம் பகுதியில் எரிவாயு உருளைகளை பதுக்கி விற்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


