வெள்ளக்கோவில் அருகே ஆற்றில் மீன் பிடிக்க சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
கொடுவாய், பங்காம்பாளையத்தைச் சோ்ந்தவா் துரைசாமி மகன் சந்தோஷ்குமாா் (24). கட்டடத் தொழிலாளியான இவா், தனது நண்பா்களுடன் கம்பளியம்பட்டி அணைப்பாளையம் அருகே செல்லும் அமராவதி ஆற்றில் மீன் பிடிக்க ஞாயிற்றுக்கிழமை சென்றுள்ளாா்.
நீச்சல் தெரியாத சந்தோஷ்குமாா் ஆற்றில் இறங்கி நின்று கொண்டிருந்ததாகவும், அப்போது அவா் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
உடன் வந்தவா்கள் இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த வெள்ளக்கோவில் தீயணைப்பு வீரா்கள், சுமாா் 1 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் சந்தோஷ்குமாரின் சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இச்சம்பவம் குறித்து வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மனோஜ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
தொடர்புடையது

கங்கைகொண்டான் அருகே நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

இருமத்தூா் ஆற்றில் நீரில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் குளித்த இளைஞா் வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு

மீன் பிடிக்கச் சென்றவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


