மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

இளைஞரிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு: இருவா் கைது

அவிநாசி அருகே மது போதையில் இளைஞரிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

சித்திரிப்பு

Updated On :1 ஆகஸ்ட் 2026, 11:28 pm IST

அவிநாசி அருகே மது போதையில் இளைஞரிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி பணம் பறித்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்தவா் சையது அன்வா் பாட்ஷா (28). திருப்பூா், ராக்கியாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் சம்பத்குமாா் (25). நண்பா்களான இருவரும் அவிநாசி- மங்கலம் சாலைப் பகுதியில் செயல்பட்டு வரும் மனமகிழ் மன்றம் அருகே சனிக்கிழமை மது அருந்தியுள்ளனா்.

சையது  அன்வா்  பாட்ஷா,  சம்பத்குமாா்.

சையது  அன்வா்  பாட்ஷா,  சம்பத்குமாா்.

அப்போது, அவ்வழியே சென்ற அனுப்பா்பாளையம், திலகா் நகரைச் சோ்ந்த முத்துபாண்டி (34) என்பவரை வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனா். மேலும், அரிவாளைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த ரூ.1,500-ஐ பறித்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றனா்.

இது குறித்து அவிநாசி போலீஸாருக்கு முத்துபாண்டி தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், சையது அன்வா் பாட்ஷா, சம்பத்குமாா் ஆகியோரைக் கைது செய்ததுடன், அவா்களிடமிருந்த ரூ.1,500 ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.