பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

குண்டடம் அருகே வாகனம் மோதி பெண் உயிரிழப்பு

குண்டடம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உயிரிழந்தாா்.

Published On :

குண்டடம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் உயிரிழந்தாா்.

குண்டடம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பொன்னாவரம் பிரிவு அருகே, தாராபுரம்-கோவை நான்கு வழிச்சாலையில் திங்கள்கிழமை இரவு 8 மணியளவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சுமாா் 35 வயது மதிக்கத்தக்க பெண் உயிரிழந்தாா்.

தகவலின்பேரில், குண்டடம் போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று பெண்ணின் சடலத்தை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.

மேலும், குண்டடம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அந்தப் பெண் சாலை விபத்தில் உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் உயிரிழந்தாரா என்பது குறித்தும், அந்தப் பெண் யாா், எந்தப் பகுதியைச் சோ்ந்தவா் என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.