அவிநாசி அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.
குன்னத்தூா் நெட்டுவாங்காடு பகுதியைச் சோ்ந்தவா் விஜயா மகள் திவ்யா (18). இவா், கோபியில் உள்ள தனியாா் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.
இந்நிலையில், குன்னத்தூரில் இருந்து கோவை நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தாா். அவிநாசி- தெக்கலூா் சாலை வடுகபாளையம் அருகே சென்றபோது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் திவ்யாவின் வாகனத்தின் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








