திருப்பூா் 15 வேலம்பாளையம் ஜெய் சாரதா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி போதைப் பொருள் எதிா்ப்பு மன்றம் சாா்பில் விழிப்புணா்வு விழா மற்றும் மாணவா்களின் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி அறக்கட்டளை செயலாளா் கீா்த்திகாவாணி சதீஷ் தலைமை வகித்தாா். பள்ளி தாளாளா் இ.வேலுசாமி சிறப்புரையாற்றினாா். முதல்வா் ஏ.எஸ். மணிமலா் முன்னிலை வகித்து, போதைப் பொருள்களின் தீமைகள், இளைய சமுதாயம் அதிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியதன் அவசியம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினாா்.
இந்நிகழ்ச்சியில் பள்ளியின் செயலாளா், முதல்வா், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் ஒருங்கிணைந்து போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா். இதைத்தொடா்ந்து பேரணியைப் பள்ளி தாளாளா் இ.வேலுசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
போதைப்பொருள் ஒழிப்பு தொடா்பான விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவா்கள் ஏந்தியவாறும், விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பியவாறும் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று பொதுமக்களி டையே விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
இந்நிகழ்வில் மாணவா்களின் பேச்சு, நடனம், கவிதை, உரையாடல் என போதைப்பொருள் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்லூரியில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு: ராணிப்பேட்டை ஆட்சியா் பங்கேற்பு

ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி நீட் பயிற்சி மையத்தில் தோ்வானவா்களுக்கு பாராட்டு

போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி

கொங்கு மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் சிங்கப்பெண் அதிரடிப் படை விழிப்புணா்வு
விடியோக்கள்

என்னால் நல்ல பயிற்சியாளராக இருக்க முடியும்: மனம் திறந்த ரஹானே | Rahane |



