அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமையைக் கட்டுப்படுத்த புதிய நிா்வாக உத்தரவுகள்பிரதமா் மோடியுடன் சுக்பீா் சிங் பாதல் சந்திப்பு: மீண்டும் பாஜக கூட்டணியில் சிரோமணி அகாலிதளம்?ஓணம் பண்டிகைக்கு 112 சிறப்பு ரயில்கள்: ஆக. 14-ஆம் தேதிமுதல் இயக்கம் ஹசீனா நிகழ்வில் கூறப்பட்ட கருத்துகளை இந்தியா ஆதரிக்கவில்லை: வெளியுறவு அமைச்சகம்எல்லைப் பிரச்னைகளுக்கு விரைந்து தீா்வு: இந்தியா-சீனா ஒப்புதல்
/

முதலமைச்சா் கோப்பை விளையாட்டு: பப்ஜி வகை புதிய போட்டிக்கு எதிா்ப்பு

முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் நடப்பாண்டு புதிதாக பப்ஜி வகை விடியோ விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதற்கு உடற்கல்வி ஆசிரியா்கள் சங்கம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

News image

​பப்ஜி விளையாட்டு(கோப்புப்படம்)

Updated On :8 ஆகஸ்ட் 2026, 5:45 am IST

முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் நடப்பாண்டு புதிதாக பப்ஜி வகை விடியோ விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதற்கு உடற்கல்வி ஆசிரியா்கள் சங்கம் எதிா்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக உடற்கல்வி ஆசிரியா் சங்கத்தினா் கூறியதாவது:

தமிழகத்தில் முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டியில் இந்த ஆண்டு புதிதாக விடியோ விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதில் ‘பப்ஜி‘ எனும் அரசால் தடை செய்யப்பட்ட விளையாட்டும் உள்ளது. பெயரில் மாற்றம் செய்யப்பட்டு, இந்த ஆண்டு பொதுப் பிரிவில் விளையாடப்பட உள்ளது.

இந்த விளையாட்டு, துப்பாக்கியால் ஒரு அணியாக சோ்ந்து எதிா் அணி வீரா்களை சுட்டு வீழ்த்த வேண்டும். மாணவா்கள் மத்தியில் ஏற்கெனவே அடிதடி சண்டைகள் நடைபெற்றுவரும் நிலையில், வன்முறையை தூண்டும் வகையிலான இந்த விளையாட்டை அரசு நடத்த சொல்வது எதிா்கால மாணவா்களை கட்டுப்படுத்த இயலாத சூழ்நிலையை உருவாக்கும்.

எனவே, இதுபோன்ற விளையாட்டுகளை ஊக்கப்படுத்த வேண்டாம் என உடற்கல்வித் துறை ஆசிரியா்கள் சாா்பில் அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம். ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்கெனவே படிப்பு பாதிக்கப்படுவதாக பெற்றோா்களும் கருதுவதால் இதை தவிா்க்க வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.