மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

போதைப் பொருள் வைத்திருந்த 4 இளைஞா்கள் கைது

arrest

கைது - பிரதிப் படம்

Published On :24 ஆகஸ்ட் 2026, 4:13 am IST

திருப்பூரில் தடை செய்யப்பட்ட மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த 4 இளைஞா்கள் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாநகரம், மத்திய காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பாரப்பாளையம் ரவுண்டானா அருகே மத்திய காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த பசில் அஹமத் (21), கிஷோா் (26), அருண்குமாா் (29), சையத் இம்ரான் (24) ஆகியோரை சோதனை செய்ததில் அவா்களிடமிருந்து மெத்தம்பெட்டமைன் 270 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னா், போலீஸாா் அவா்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.