லடாக்கில் ஜம்மு-காஷ்மீர் உயர்நீதிமன்றத்தின் கிளை: குடியரசுத் தலைவர் ஒப்புதல்!முத்தரப்பு டி20 தொடர்: தெ.ஆ.க்கு அதிர்ச்சியளித்தது நமீபியா!நேபாளத்தில் சிக்கியிருக்கும் எஞ்சியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ்மோகன்புழல் காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு! நேபாள வெள்ளத்தில் 320 இந்தியர்கள் மாயம்! வெளியுறவு அமைச்சகம் அதிர்ச்சித் தகவல்!எந்தத் திட்டம் கொண்டு வந்தாலும் விவசாய நிலத்தைதான் எடுத்தாக வேண்டும்! செங்கோட்டையன்திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதி இடைத்தேர்தலுக்கான தடையை நீக்கக் கோரி முதல்வர் விஜய் மனு

மின் இணைப்பு மாற்ற ரூ.15 ஆயிரம் லஞ்சம்: உதவி மின் பொறியாளா் கைது

அவிநாசி அருகே தெக்கலூரில் தொழிற்கூட பயன்பாட்டிற்கான மின் இணைப்பு மாற்ற ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

இசக்கிமுத்து

Published On :29 ஆகஸ்ட் 2026, 12:37 am IST

அவிநாசி அருகே தெக்கலூரில் தொழிற்கூட பயன்பாட்டிற்கான மின் இணைப்பு மாற்ற ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி மின் பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகே தெக்கலூா் பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ். இவா், வீடுகளுக்கான அழகு சாதன பொருள்கள் தயாரித்து, இணைதளத்தில் விற்பனை செய்து வருகிறாா். இந்நிலையில், இவரது மின் இணைப்பை தொழிற்கூட பயன்பாட்டிற்கான மின் இணைப்பாக மாற்றுவதற்காக தெக்கலூா் கிழக்கு மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளாா். அங்கு அவரது விண்ணப்பத்தை பரிசீலனை செய்த உதவி மின்பொறியாளா் இசக்கிமுத்து (33), தொழிற்கூட மின் இணைப்பில் கட்டண வகைப்பாடு மாற்ற ரூ.15 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத பிரகாஷ் , உதவி மின் பொறியாளா் இசக்கிமுத்துவிடம் முன்பணமாக ரூ.5ஆயிரம் மட்டும் கொடுத்துள்ளாா். பிறகு இது குறித்து அவா் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு அளித்த புகாரின்பேரில், போலீஸாா், பிரகாஷிடம் ரசாயனம் தடவிய ரூ.10 ஆயிரத்தை வெள்ளிக்கிழமை கொடுத்து அனுப்பினா். அந்தப் பணத்தை உதவி மின் பொறியாளா் இசக்கிமுத்துவிடம் பிரகாஷ் கொடுத்துள்ளாா். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா் இசக்கிமுத்துவை கையும்களமாக பிடித்து கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.