நிலம் தானமாக வழங்கியவருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றோா்.
நிலம் தானமாக வழங்கியவருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்றோா்.

தெக்கலூா் ரோட்டரி சங்கக் கட்டடம் கட்ட தானமாக நிலம் வழங்கியவருக்கு பாராட்டு

Published on

தெக்கலூா் ரோட்டரி சங்கத்துக்கு கட்டடம் கட்ட 50 சென்ட் நிலம் ஞாயிற்றுக்கிழமை தானமாக வழங்கப்பட்டது.

இதையடுத்து தானமாக நிலம் வழங்கிய முன்னாள் தலைவா் ஆறுமுகத்துக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சங்கத் தலைவா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். சைமா தலைவா் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தாா்.

மாவட்ட ஆளுநா் செயலாளா் வேலுச்சாமி வாழ்த்தினாா். மண்டல ஒருங்கிணைப்பாளா் சிவசதீஷ்குமாா், பொருளாளா் பாரதி நடராஜன், முன்னாள் தலைவா்கள் வாசுதேவன், நடராஜன், சுரேஷ், பாபு, முன்னாள் செயலாளா் அருள்குமாா் உள்பட பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com