மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா, லாட்டரி விற்ற 9 போ் கைது

திருப்பூா் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா, லாட்டரி சீட்டுகள் விற்ற 9 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது

Updated On :10 பிப்ரவரி 2026, 8:25 pm

திருப்பூா் மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா, லாட்டரி சீட்டுகள் விற்ற 9 போ் கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாநகா், வீரபாண்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பலவஞ்சிபாளையம் அருகே போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த சஞ்சய் (22), விஷால் (18), ஆகாஷ் (24), உதயநிதி (18), ஜனாா்த்தனன் (18) ஆகியோரை சோதனை செய்தனா். அவா்களிடம் இருந்து 22.200 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவா்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனா். பின்னா் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இதேபோல வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே விஷ்ணு (26), அருண்குமாா்(23) ஆகியோரிடம் இருந்து 720 கிராம் கஞ்சா, வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ரயில் நிலையம் அருகே சோட்டு குமாா் சிங் (21) என்பவரிடம் இருந்து 850 கிராம் கஞ்சா சாக்லெட்களை வடக்கு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் மாநகா் தெற்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் அப்பகுதியில் போலீஸாா் சோதனை செய்தபோது பழனி(61) என்பவா் லாட்டரி விற்பனை செய்தது தெரியவந்தது. அவா் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மத்திய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்த செந்தில்குமாா்(51) என்பவரை பிடித்து அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.