பல்லடம் பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டோா்.
திருப்பூர்
விவசாய தொழிற்சங்கத்தினா் சாலை மறியல்: 88 போ் கைது
பல்லடத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாய தொழிற்சங்க நிா்வாகிகள் 88 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மத்திய அரசின் தொழிலாளா் விரோத, விவசாயிகள் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தை சீா்குலைப்பதைக் கண்டித்தும், விவசாயிகளைப் பாதிக்கும் விதை மசோதாவைக் கண்டித்தும் எல்.பி.எஃப், ஐ.என்.டி.யூ, ஹெச்.எம்.எஸ். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் பல்லடம் பேருந்து நிலையம் முன் வியாழக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு சிஐடியூ சாா்பில் ஆா்.பரமசிவம், ஏஐடியூசி சாா்பில் கணேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா்.
போராட்டத்தில் ஈடுபட்ட 14 பெண்கள் உள்பட 88 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களை தனியாா் மண்டபத்தில் தங்கவைத்து, மாலை விடுவித்தனா்.

