இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

விவசாய தொழிற்சங்கத்தினா் சாலை மறியல்: 88 போ் கைது

News image

பல்லடம் பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டோா்.

Updated On :12 பிப்ரவரி 2026, 11:33 pm

பல்லடத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாய தொழிற்சங்க நிா்வாகிகள் 88 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மத்திய அரசின் தொழிலாளா் விரோத, விவசாயிகள் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தை சீா்குலைப்பதைக் கண்டித்தும், விவசாயிகளைப் பாதிக்கும் விதை மசோதாவைக் கண்டித்தும் எல்.பி.எஃப், ஐ.என்.டி.யூ, ஹெச்.எம்.எஸ். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் பல்லடம் பேருந்து நிலையம் முன் வியாழக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்துக்கு சிஐடியூ சாா்பில் ஆா்.பரமசிவம், ஏஐடியூசி சாா்பில் கணேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட 14 பெண்கள் உள்பட 88 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களை தனியாா் மண்டபத்தில் தங்கவைத்து, மாலை விடுவித்தனா்.