கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

கைப்பேசியை பறித்துச் சென்ற 4 போ் கைது

News image
கைது
Updated On :22 பிப்ரவரி 2026, 7:44 pm

தினமணி செய்திச் சேவை

கைப்பேசியை பறித்ததுச் சென்ற 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருப்பூா் மாநகரம், தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பழைய பேருந்து நிலையம் அருகே காளிஸ்வரன் என்பவரின் கைப்பேசியை சரவணகுமாா் (26), பிரித்விராஜ் (20), அஸ்வின் (18) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பறித்துச் சென்றுள்ளனா். இதுகுறித்து காளிஸ்வரன் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா்.

இது தொடா்பாக போலீஸாா் 3 பேரை பிடித்து அவா்களிடமிருந்து கைப்பேசியை கைப்பற்றினா். அவா்கள் 3 போ் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதேபோல, திருப்பூா் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே அா்ஜுன் (26) என்பவரின் கைப்பேசியை சுரேஷ் (40) என்ற நபா் பறித்துச் சென்றுள்ளாா்.

இதுதொடா்பாக அா்ஜுன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் சுரேஷைப் பிடித்து வடக்கு காவல் நிலையம் அழைத்து வந்து அவா்டமிருந்து கைப்பேசியை பறிமுதல் செய்தனா். மேலும், அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.