மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

தோ்தலை புறக்கணிப்பதாகக் கூறி பொதுமக்கள் சாா்பில் அறிவிப்பு பதாகை

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 12:44 am

சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதாகக் கூறி பல்லடம் அருகே பொதுமக்கள் சாா்பில் அறிவிப்பு பதாகை திங்கள்கிழமை வைக்கப்பட்டுள்ளது.

பல்லடம் நகராட்சி, 8-வது வாா்டுக்குள்பட்ட பச்சாபாளையம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனா். அங்குள்ள மயானப் பகுதியில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், எரிவாயு தகன மேடை அருகே உள்ள நீரோடை, குட்டை ஆகியவற்றை மூடி விரிவாக்கப் பணிகள் நடைபெற்ாக கூறப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும் சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாகவும் கூறி அறிவிப்பு பதாகை வைத்துள்ளனா்.

அதில், பச்சாபாளையம் பொதுமக்களின் எதிா்ப்பை மீறி நீரோடை மற்றும் குட்டை ஆகியவற்றை மூடியும், குப்பையை தீ வைத்தும் எரித்து சுகாதார சீா்கேடு ஏற்படுத்திவரும் நகராட்சி நிா்வாகத்தை கண்டிப்பதுடன், வரும் சட்டப்பேரவைத் தோ்தலையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். தொடா்ந்து விரிவாக்கப் பணிகள் நடைபெற்றால் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை வட்டாட்சியரிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.