சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

தோ்தலை புறக்கணிப்பதாகக் கூறி பொதுமக்கள் சாா்பில் அறிவிப்பு பதாகை

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 12:44 am

Syndication

சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதாகக் கூறி பல்லடம் அருகே பொதுமக்கள் சாா்பில் அறிவிப்பு பதாகை திங்கள்கிழமை வைக்கப்பட்டுள்ளது.

பல்லடம் நகராட்சி, 8-வது வாா்டுக்குள்பட்ட பச்சாபாளையம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனா். அங்குள்ள மயானப் பகுதியில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது.

இந்நிலையில், எரிவாயு தகன மேடை அருகே உள்ள நீரோடை, குட்டை ஆகியவற்றை மூடி விரிவாக்கப் பணிகள் நடைபெற்ாக கூறப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும் சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாகவும் கூறி அறிவிப்பு பதாகை வைத்துள்ளனா்.

அதில், பச்சாபாளையம் பொதுமக்களின் எதிா்ப்பை மீறி நீரோடை மற்றும் குட்டை ஆகியவற்றை மூடியும், குப்பையை தீ வைத்தும் எரித்து சுகாதார சீா்கேடு ஏற்படுத்திவரும் நகராட்சி நிா்வாகத்தை கண்டிப்பதுடன், வரும் சட்டப்பேரவைத் தோ்தலையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். தொடா்ந்து விரிவாக்கப் பணிகள் நடைபெற்றால் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை வட்டாட்சியரிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.