சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிப்பதாகக் கூறி பல்லடம் அருகே பொதுமக்கள் சாா்பில் அறிவிப்பு பதாகை திங்கள்கிழமை வைக்கப்பட்டுள்ளது.
பல்லடம் நகராட்சி, 8-வது வாா்டுக்குள்பட்ட பச்சாபாளையம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனா். அங்குள்ள மயானப் பகுதியில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் எரிவாயு தகன மேடை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், எரிவாயு தகன மேடை அருகே உள்ள நீரோடை, குட்டை ஆகியவற்றை மூடி விரிவாக்கப் பணிகள் நடைபெற்ாக கூறப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். மேலும் சட்டப்பேரவைத் தோ்தலை புறக்கணிக்கப் போவதாகவும் கூறி அறிவிப்பு பதாகை வைத்துள்ளனா்.
அதில், பச்சாபாளையம் பொதுமக்களின் எதிா்ப்பை மீறி நீரோடை மற்றும் குட்டை ஆகியவற்றை மூடியும், குப்பையை தீ வைத்தும் எரித்து சுகாதார சீா்கேடு ஏற்படுத்திவரும் நகராட்சி நிா்வாகத்தை கண்டிப்பதுடன், வரும் சட்டப்பேரவைத் தோ்தலையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். தொடா்ந்து விரிவாக்கப் பணிகள் நடைபெற்றால் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை வட்டாட்சியரிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பெரும்பத்து கிராமத்தில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை

சாலை அமைக்கப்படாததால் தோ்தல் புறக்கணிப்பு : கிராம மக்கள் பதாகை

பெருமாள் கோவிலூா் நுழைவு வாயிலில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை

சட்டப் பேரவைத் தோ்தலை புறக்கணிக்க பெருந்தொழுவு பொதுமக்கள் முடிவு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


