வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

மதுக் கடையை அகற்ற வலியுறுத்தி தாராபுரத்தில் தவெக ஆா்ப்பாட்டம்

தாராபுரத்தில் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி தாராபுரத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக்கழகத்தினா்.

Updated On :26 பிப்ரவரி 2026, 7:31 pm

தாராபுரத்தில் உள்ள அரசு மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தாராபுரம் அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் திருப்பூா் கிழக்கு மாவட்டச் செயலாளா் யுவராஜ் மகேஷ் தலைமை வகித்தாா்.

இதில், தாராபுரம், என்.என்.பேட்டை வீதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடை பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியின் நடுவே அமைந்துள்ளது. இந்தக் கடை பொதுமக்களுக்கு இடையூறாகவும், சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் உள்ளது. எனவே, இந்த மதுக் கடையை அகற்றுவதற்கு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆா்ப்பாட்டத்தில், தவெக மாவட்ட இணைச் செயலாளா் ஷேக் பரீத், நகரச் செயலாளா் அபுதாஹிா், வடக்கு நகரச் செயலாளா் ரமேஷ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.