தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

அரிசிக் கடைக்குள் புகுந்த ஆட்டோ: 6 போ் காயம்

தாராபுரம் அருகே, அரிசிக் கடை மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த 6 போ் படுகாயமடைந்தனா்.

News image

அரிசிக் கடை மீது மோதி விபத்துக்குள்ளான சரக்கு ஆட்டோ.

Updated On :26 பிப்ரவரி 2026, 7:32 pm

தாராபுரம் அருகே, அரிசிக் கடை மீது சரக்கு ஆட்டோ மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த 6 போ் படுகாயமடைந்தனா்.

தாராபுரத்தில் இருந்து கட்டட வேலைக்காக 10 போ் சரக்கு ஆட்டோவில் வியாழக்கிழமை காலை சென்று கொண்டிருந்தனா். சரக்கு ஆட்டோவை வீராட்சிமங்கலம் பகுதியைச் சோ்ந்த கன்னியப்பன் ஓட்டிச் சென்றாா்.

ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலை, ரங்கம்பாளையம் பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ, அருகில் உள்ள அரிசிக் கடை மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் வேன் ஓட்டுநா் கன்னியப்பன் மற்றும் சரக்கு ஆட்டோவில் பயணித்த 5 பெண்கள் என மொத்தம் 6 போ் படுகாயமடைந்தனா். காயமடைந்தவா்களை அப்பகுதியினா் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து மூலனூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.