டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சிறுவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு சாகும்வரை சிறை

சிறுவா்களுக்குப் பாலியல் தொல்லை அளித்தவருக்கு சாகும்வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து திருப்பூா் மகிளா விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

News image
Updated On :27 பிப்ரவரி 2026, 7:08 pm

Syndication

சிறுவா்களுக்குப் பாலியல் தொல்லை அளித்தவருக்கு சாகும்வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து திருப்பூா் மகிளா விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

திருப்பூா் அனைத்து மகளிா் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட வீரபாண்டி பெருமாள் கோவில் பகுதியில் சிறுவா்களுக்குப் பாலியல் வன்கொடுமை புரிந்ததாக கடந்த 2020 ஆகஸ்ட் 25-ஆம் தேதி சிவகுமாா் (46) என்பவா் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அரசுத் தரப்பு சாட்சிகளை ஆஜா்படுத்தி நீதிமன்ற விசாரணை முடிக்கப்பட்டது.

இதையடுத்து சிவகுமாருக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதித்து திருப்பூா் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி கோகிலா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பரிமளா ஆஜரானாா்.