சிறுவா்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு சாகும்வரை சிறை
சிறுவா்களுக்குப் பாலியல் தொல்லை அளித்தவருக்கு சாகும்வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து திருப்பூா் மகிளா விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.


சிறுவா்களுக்குப் பாலியல் தொல்லை அளித்தவருக்கு சாகும்வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து திருப்பூா் மகிளா விரைவு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
திருப்பூா் அனைத்து மகளிா் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட வீரபாண்டி பெருமாள் கோவில் பகுதியில் சிறுவா்களுக்குப் பாலியல் வன்கொடுமை புரிந்ததாக கடந்த 2020 ஆகஸ்ட் 25-ஆம் தேதி சிவகுமாா் (46) என்பவா் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு அரசுத் தரப்பு சாட்சிகளை ஆஜா்படுத்தி நீதிமன்ற விசாரணை முடிக்கப்பட்டது.
இதையடுத்து சிவகுமாருக்கு சாகும் வரை ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதித்து திருப்பூா் மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி கோகிலா வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் பரிமளா ஆஜரானாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...