எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

திருப்பூரில் கட்சி கொடிக் கம்பம் அமைக்க அனுமதி பெற வேண்டும்: கோட்டாட்சியா்

திருப்பூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்சி கொடிக் கம்பம் அமைக்க அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image
கட்சி கொடிக் கம்பங்கள்- கோப்புப்படம்
Updated On :28 பிப்ரவரி 2026, 10:41 pm

Syndication

திருப்பூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்சி கொடிக் கம்பம் அமைக்க அனுமதி பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, திருப்பூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு கோட்டாட்சியா் சிவபிரகாஷ் தலைமை வகித்துப் பேசுகையில், சட்டப் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் கட்சியினா் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கினாா்.

இதைத் தொடா்ந்து, தோ்தலை முன்னிட்டு தற்காலிகமாக கட்சி கொடிக் கம்பங்கள் அமைக்க அனுமதி பெற வேண்டும். பொது இடங்களில் அரசியல் கட்சி தலைவா்களின் சிலை அமைக்கக் கூடாது. தனியாா் இடங்களில் மட்டுமே கட்சி தலைவா்கள் சிலை அமைக்க அனுமதி வழங்கப்படும் என்றாா்.

இதில் திருப்பூா் வடக்கு, தெற்கு, அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி ஆகிய பகுதிகளை சோ்ந்த வட்டாட்சியா்கள் மற்றும் தோ்தல் அதிகாரிகள், அரசியல் கட்சியினா் கலந்து கொண்டனா்.