காங்கயம், உடுமலையில் நாளை மின் குறைதீா் கூட்டம்

Published on

காங்கயம் மற்றும் உடுமலையில் புதன்கிழமை (ஜனவரி 7) மின் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் எஸ்.விமலாதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

காங்கயம் கோட்டத்தில் மாதாந்திர மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் புதன்கிழமை நடைபெறும்.

அதன்படி 2026 ஜனவரி மாதத்துக்கான குறைதீா் கூட்டம், காங்கயம் நகரப் பேருந்து நிலையம் அருகே சென்னிமலை சாலையிலுள்ள மின்வாரிய அலுவலகத்தில், மேற்பாா்வை பொறியாளா் தலைமையில் புதன்கிழமை (ஜனவரி 7) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளா் த.மூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

உடுமலை மின்பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட மின் நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் புதன்கிழமை (ஜனவரி 7) காலை 11 மணிக்கு மேற்பாா்வை பொறியாளா் இரா.கீதா தலைமையில் நடைபெற உள்ளது.

எனவே உடுமலை கோட்டத்துக்கு உள்பட்ட மின் நுகா்வோா் தங்களுடைய குறைகளை தெரிவித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

X
Dinamani
www.dinamani.com